Search blog.co.uk

  • winxp dos print folder contents(get file list)

    After you install Open "Command Window Here" free from Microsoft.
    microsoft xp power toys
    Open My Computer and go to the folder you want a print out of.
    Click on the Folder
    Right click on the folder and choose "Open Command Window Here"
    The old dos box will appear already in that folder.
    Type
    dir /s >> mystuff1.txt or dir /s>mystuff1.txt or without sub folder dir /b>mystuff1.txt
    hit the enter key
    Then type
    start mystuff1.txt
    hit the enter key
    Note pad will open showing the contents,size and other information for you.

    Thanks for the visit

    source: http://www.pc-ask.com/xp-dos/xp-dos-1.html

  • title-930034

    If you have important files that are stored in a particular disk drive (disk partition) that you don?t want to expose it, you can hide it! Windows XP provides a utility to just that. Here is how it goes:
    1. Go to Start > Run > Type "diskpart"
    2. A dos window will appear (see below). Then type "list volume".
    3. So, if you want to hide drive C, then type "select volume 2"
    4. Now type "remove letter C" (Note: Sometime it requires reboot.)

    Diskpart will remove the letter. Windows XP is not having capabilty to identify the unkown volume.

    Don?t worry, your data will remains the same. Now if you want to unhide the drive, just repeat the process. But in 4th step, instead of typing "remove letter C", type "assign letter C"

  • சி. சுப்ரமணிய பாரதி தேசிய கீதங்கள் - பாரத நாடு

    1. வந்தே மாதரம்

    ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி

    பல்லவி

    வந்தே மாதரம் என்போம் - எங்கள்
    மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

    சரணங்கள்

    ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
    ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
    வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
    வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

    ஈனப் பறையர்க ளேனும் அவர்
    எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
    சீனத் தராய்விடு வாரோ? - பிற
    தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
    அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
    தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

    எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
    யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
    முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
    முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

    புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
    போயின நாட்களுக் கினிமனம் நாணித்
    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

    --------------------------------------------------------------------------------

    2. ஜய வந்தே மாதரம்

    ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி

    பல்லவி

    வந்தே மாதரம் - ஜய
    வந்தே மாதரம்.

    சரணங்கள்

    ஜயஜய பாரத ஜயஜய பாரத
    ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

    ஆரிய பூமியில் நாரிய ரும் நர
    சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

    நொந்தே போயினும் வெந்தே மாயினும்
    நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

    ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
    சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)

    --------------------------------------------------------------------------------

    3. நாட்டு வணக்கம்

    ராகம் - காம்போதி தாளம் - ஆதி

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ? - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

    இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
    ஈந்ததும் இந்நாடே - எங்கள்
    அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
    அறிந்ததும் இந்நாடே - அவர்
    கன்னிய ராகி நிலவினி லாடிக்
    களித்ததும் இந்நாடே - தங்கள்
    பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
    போந்ததும் இந்நாடே - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

    மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
    வளர்த்ததும் இந்நாடே - அவர்
    தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
    தழுவிய திந்நாடே - மக்கள்
    துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
    சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
    அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
    ஆர்ந்ததும் இந்நாடே - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ?

    --------------------------------------------------------------------------------

    4. பாரத நாடு

    ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி

    பல்லவி

    பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
    பாரத நாடு.

    சரணங்கள்

    ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
    மானத்தி லேஅன்ன தானத்திலே
    கானத்தி லேஅமு தாக நிறைந்த
    கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
    ஈரத்தி லேஉப காரத்திலே
    சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
    தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
    பன்மையி லேமறத் தன்மையிலே
    பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
    புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
    வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
    காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
    கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
    தண்மையி லேமதி நுண்மையிலே
    உண்மையி லேதவ றாத புலவர்
    உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
    யோகத்தி லேபல போகத்திலே
    ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
    அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
    காற்றினி லேமலைப் பேற்றினிலே
    ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
    இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
    ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
    தேட்டத்தி லேஅடங் காத நதியின்
    சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)

    --------------------------------------------------------------------------------

    5. பாரத தேசம்

    ராகம் - புன்னாகவராளி

    பல்லவி

    பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
    பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

    சரணங்கள்

    வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
    மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
    பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

    சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

    வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
    வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
    எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
    எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

    முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
    மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
    நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
    நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

    சிந்து நதியின்மிசை நிலவினி லே
    சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
    சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
    தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

    கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
    சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

    காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
    காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
    ராசபுத் தானத்து வீரர் தமக்கு
    நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

    பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
    பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
    கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
    காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

    ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

    குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
    கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

    மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
    வானையளப் போம்கடல் மீனையளப்போம்
    சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
    சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

    காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
    கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
    ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
    உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

    சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
    தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
    நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
    நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

    --------------------------------------------------------------------------------

    6. எங்கள் நாடு

    ராகம் - பூபாளம்

    மன்னும் இமயமலை யெங்கள் மலையே
    மாநில மீதிது போற்பிறி திலையே!
    இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
    இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
    பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
    பார் மிசை யேதொரு நூல்இது போலே?
    பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
    போற்றுவம் இ·தை எமக்கில்லை ஈடே.

    மாரத வீரர் மலிந்தநன் னாடு
    மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
    நாரத கான நலந்திகழ் நாடு
    நல்லன யாவையும் நாடுறு நாடு
    பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
    புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
    பாரத நாடு பழம்பெரு நாடே
    பாடுவம் இ·தை எமக்கிலை ஈடே.

    இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
    ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
    தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
    தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
    கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
    கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்
    உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
    ஓதுவம் இ·தை எமக்கில்லை ஈடே.

    --------------------------------------------------------------------------------

    7. ஜயபாரத

    சிறந்து நின்ற சிந்தை யோடு
    தேயம் நூறு வென்றிவள்
    மறந்த விர்ந்த் நாடர் வந்து
    வாழி சொன்ன போழ்தினும்
    இறந்து மாண்பு தீர மிக்க
    ஏழ்மை கொண்ட போழ்தினும்
    அறந்த விர்க்கி லாது நிற்கும்
    அன்னை வெற்றி கொள்கவே!

    நூறு கோடி நூல்கள் செய்து
    நூறு தேய வாணர்கள்
    தேறும் உண்மை கொள்ள இங்கு
    தேடி வந்த நாளினும்
    மாறு கொண்டு கல்லி தேய
    வண்ணி தீர்ந்த நாளினும்
    ஈறு நிற்கும் உண்மை யொன்று
    இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே!

    வில்லர் வாழ்வு குன்றி ஓய
    வீர வாளும் மாயவே
    வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
    மெய்மை நூல்கள் தேயவும்
    சொல்லும் இவ் வனைத்தும் வேறு
    சூழ நன்மை யுந்தர
    வல்ல நூல் கெடாது காப்பள்
    வாழி அன்னை வாழியே!

    தேவ ருண்ணும் நன்ம ருந்து
    சேர்ந்த கும்பம் என்னவும்
    மேவுவார் கடற்கண் உள்ள
    வெள்ள நீரை ஒப்பவும்
    பாவ நெஞ்சினோர் நிதம்
    பறித்தல் செய்வ ராயினும்
    ஓவி லாதசெல்வம் இன்னும்
    ஓங்கும் அன்னை வாழ்கவே!

    இதந்தரும் தொழில்கள் செய்து
    இரும்பு விக்கு நல்கினள்
    பதந்தரற் குரிய வாய
    பன்ம தங்கள் நாட்டினள்
    விதம்பெறும்பல் நாடி னர்க்கு
    வேறொ ருண்மை தோற்றவே
    சுதந்திரத்தி லாசை இன்று
    தோற்றி னாள்மன் வாழ்கவே!

    --------------------------------------------------------------------------------

    8. பாரத மாதா

    தான தனந்தன தான தனந்தன
    தானனத் தானா னே.

    முன்னை இலங்கை அரக்கர் அழிய
    முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
    அன்னை பயங்கரி பாரத தேவி நல்
    ஆரிய ராணியின் வில்.

    இந்திர சித்தன் இரண்டு துண்டாக
    எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
    மந்திரத் தெய்வம் பாரத ராணி,
    வயிரவி தன்னுடைய வில்.

    ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
    உலகின்பக் கேணி என்றே - மிக
    நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
    நாயகி தன்திருக் கை.

    சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
    சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
    அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
    ஆரிய ராணியின் சொல்.

    சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
    தட்டி விளையாடி - நன்று
    உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
    ஒளியுறப் பெற்ற பிள்ளை.

    காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
    கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
    ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
    ஆரிய தேவியின் தோள்.

    சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
    தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
    பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
    பாரத ராணியின் கை.

    போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
    புகன்ற தெவருடை வாய்? - பகை
    தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
    தேவிமலர் திரு வாய்.

    தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும்
    தையலர் தம்முறவும் - இனி
    இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
    எம் அனை செய்த உள்ளம்.

    அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
    அன்பினிற் போகும் என்றே - இங்கு
    முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
    மொழி எங்கள் அன்னை மொழி.

    மிதிலை எரிந்திட வேதப் பொருளை
    வினவும் சனகன் மதி - தன்
    மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
    வல்ல நம் அன்னை மதி.

    தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
    செய்த தெவர் கவிதை? - அயன்
    செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
    தேவி அருட் கவிதை.

    --------------------------------------------------------------------------------

    9. எங்கள் தாய்

    (காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

    தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
    சூழ்கலை வாணர்களும் - இவள்
    என்று பிறந்தவள் என்றுண ராத
    இயல்பின ளாம் எங்கள் தாய்.

    யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
    ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
    பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
    பயின்றிடு வாள்எங்கள் தாய்.

    முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
    மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
    செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
    சிந்தனை ஒன்றுடையாள்.

    நாவினில் வேத முடையவள் கையில்
    நலந்திகழ் வாளுடை யாள் - தனை
    மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
    வீட்டிடு தோளுடையாள்.

    அறுபது கோடி தடக்கைக ளாலும்
    அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
    செறுவது நாடி வருபவ ரைத்துகள்
    செய்து கிடத்துவள் தாய்.

    பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்
    புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
    தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
    துர்க்கை யனையவள் தாய்.

    கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
    கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
    ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
    ஒருவனை யுந்தொழு வாள்.

    யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
    ஒன்றென நன்றறி வாள் - உயர்
    போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
    பொற்குவை தானுடையாள்.

    நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
    நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்
    அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
    ஆனந்தக் கூத்தி டுவாள்.

    வெண்மை வளரிம யாசலன் தந்த
    விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
    திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
    சீருறு வாள்எங்கள் தாய்.

    --------------------------------------------------------------------------------

    10. வெறி கொண்ட தாய்

    ராகம் - ஆபோகி தாளம் - ரூபகம்

    பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
    பித்துடையாள் எங்கள் அன்னை
    காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்
    காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)

    இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து
    எற்றும் அலைத்திரள் வெள்ளம்
    தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
    தாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்)

    தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
    தெய்வீக நன்மணம் வீசும்
    தேஞ்சொரி மாமலர் சூடி - மது
    தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)

    வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை
    வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
    ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்
    தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)

    பாரதப் போரெனில் எளிதோ? - விறற்
    பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
    மாரதர் கோடிவந் தாலும் - கணம்
    மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்)

    --------------------------------------------------------------------------------

    11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

    பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
    புன்மை யிருட்க&

  • How to Hide Drives in Windows XP

    If you have important files that are stored in a particular disk drive (disk partition) that you don't want to expose it, you can hide it! Windows XP provides a utility to just that. Here is how it goes:
    Go to Start > Run > Type "diskpart"
    A dos window will appear (see below). Then type "list volume".
    So, if you want to hide drive C, then type "select volume 2"
    Now type "remove letter C" (Note: Sometime it requires reboot.)

    diskpart_small

    Diskpart will remove the letter. Windows XP is not having capabilty to identify the unkown volume.

    Don?t worry, your data will remains the same. Now if you want to unhide the drive, just repeat the process. But in 4th step, instead of typing "remove letter C", type "assign letter C"

  • ilavanji

    http://ilavanji.blogspot.com/2006/05/4.html#links

  • ilavanji.blogspot.com

    யாருங்க அங்க?! ஆரம்பிக்கும் போதே "யோவ்! என்னைய்யா தலைப்பு இது! கெரகசாரம்"னு கொரலு விடறது? இதென்ன அவ்வளவு ஈசியான சமாச்சாரம்னு நினைச்சிட்டீங்களா? இங்க மட்டும் ஏனோதானோன்னு இருந்து கோட்டை விட்டுட்டீங்கன்னா அப்பறம் வாழ்க்கை முழுக்க தமிழ்மணமும் தேன்கூடும்தான் கதி! ஏஞ்சொல்லறேன்னா புள்ளைங்க படிச்சு முன்னேற்ற வேகத்துக்கும், அவங்க வெவரமாகற லெவலுக்கும், இருக்கற மெதப்புக்கும் போற போக்கைப் பார்த்தா இந்த வடிவேலு சரளாக்காவை புடிச்சமாதிரி, மனசுக்குப் புடிச்ச பொண்ணு வீட்டு முக்குல மறைவா நின்னுக்கிட்டு வெளில வாரப்ப ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கிக்கிட்டு வந்து தாலி கட்டுனாத்தான் உண்டுபோல! அதுக்கப்பறம் வாங்கப்போற விழுப்புண்களை வைகைப்புயலே தாங்கும்போது நமக்கென்னங்க?!

    சரிங்க! வீட்டுல சொல்லீட்டிங்க! அவங்களும் நாலாபக்கமும் தகவலை பரப்ப ஆரம்பிச்சிருப்பாங்க! நீங்க என்ன செய்யப்போறீங்க?! வேண்டிய மாற்றங்கள் எல்லாம் செஞ்சு பார்க்க பளிச்சுன்னு மாறுனீங்களே! அதற்கு ஆதாரம் வேண்டாமா? அதனால இப்போ செய்ய வேண்டியது மேலும் பளிச்சுன்னு இருக்கறமாதிரி ரெண்டு போட்டோ எடுக்கறது! நீங்க ஆரம்பக்காலத்துல இருந்து ஆர்னால்டு சிவனேசனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ரசிகரா இருக்கலாம்! அதுக்காக கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ இருக்க போட்டோவெல்லாம் வேளைக்காவாது! ரொம்ப ஃபார்மலாவும் இல்லாம ரொம்ப இயல்பாகவும் இல்லாம ஒரு மார்க்கமா "ஆமாங்க! நீங்க மாப்ளைய பார்க்கறதுக்கவே எடுத்த போட்டோ இது"ங்கற மாதிரி இருந்தா எதேஷ்டம்! தொப்பை தெரியக் கூடாதுங்கறதுக்காக உள்ள இழுத்துப் பிடிச்சுக்கிட்டும், மேல டாப்புல காலி ஏரியா வரக்கூடாதுங்கறதுக்காக மூஞ்சியை மேல தூக்கிட்டும் ஒரு மாதிரி அவஸ்தையோட இருக்கற மாதிரி நாமளே போட்டோ எடுத்துக்கறதை விட இதுக்குன்னே இருக்கற ஸ்டூடியோல போய் எடுத்துக்கிட்டா அவங்க இதெல்லாம் தெரியாத மாதிரி அழகான ஆங்கிள்ல நல்லா சிரிச்சா மாதிரி ஒரு ஃபுல் சைசும் ஒரு ஆஃப் சைசும் எடுத்துக் குடுப்பாங்க! சர்குலேசனுக்கு இதை விடுங்க! (நானெல்லாம் கோவை IABலதான் தான் எடுத்தேன்! இன்னைக்கும் எங்க வீட்டுல அப்பப்ப "இந்த IAB மட்டும் இல்லைன்னா நமக்கு கல்யாணமே நடந்திருக்காது"ங்கற அசரீரி கேட்கும்! :) )

    இன்னொன்னும் ஞாபகம் வைச்சுக்கங்க! என்னதான் பொண்ணு பிக்ஸ் ஆகி அவங்களை அடிக்கடி பார்த்து பேசுனாலும் கல்யாணம் முடியற வரைக்கும் அவங்களுக்கு இந்த போட்டோல இருக்கற முகம் தான் ஞாபகம் இருக்கும்! ஏன்னா, அவங்க தெனம் நைட்டு தூங்கப்போறது இந்த போட்டோவை பார்த்துட்டுத்தான்! (உங்க முகராசிக்கு ஏற்றபடி, ஒரு செல்ல 'இச்'சோ இல்லைன்னா பொய்க்கோப கண்ணக்கிள்ளலோ கிடைக்கலாம்! ) அதனால பொகைப்படத்தை பார்த்து பக்குவமா எடுங்கப்பு!

    வாழ்க்கைல கடைசி வரைக்கும் விடை தெரியாத ஒரு கேள்வி இருக்கும்னா அது "நமக்கு எந்த மாதிரி பொண்ணு சரியா வரும்?!"கற கேள்வியாத்தான் இருக்கும்! ஏன்னா நாம எந்த மாதிரி ஆளுங்கறதே நமக்கு முழுசா தெரியாது! இன்னைக்கு டிவில "விரும்புகிறேன்" போட்டா "அடடா! பொண்ணுன்னா இப்படி சினேகா மாதிரி பாவாடை தாவணில அம்சமா இருக்கனும்"னு தோணும்! அடுத்தநாளே SCVல கஜினி பாட்டுல "சுட்டும் விழி சுடரே"ல அசின் நெளிஞ்சு நடக்கறதை பார்த்தா "கட்டுனா இந்தமாதிரி அசத்தலான புள்ளையத்தான் கட்டனும்"னு தோணும்! என்னங்க செய்யறது? நம்ப புத்தி அப்படி! அதனால ஆண்டவன் அவங்களை மட்டும் அத்தன தினுசா படைச்சு வைச்சிருக்காப்புலன்னு மனசை ஒழப்பிக்காதிங்க! ஆண்டவன் நமக்கெல்லாம் அவங்களை அத்தனை தினுசா பார்க்கற கலைக்கண்ணை கொடுத்திருக்கான்னு மனசை தேத்திக்கங்க!

    இந்த குழப்பத்தை எப்படிங்க தாண்டறதுன்னு கேக்கறீங்களா? அரசியல் கட்சிகளால பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லைன்னு இதுநாள் வரைக்கும் பொலம்புன ஆளா இருந்தீங்கன்னா அந்த நெனைப்பை மாத்தவேண்டிய நேரம் வந்துருச்சு! அவங்ககிட்ட இருந்து நாம இப்போ கடன் வாங்கப்போற அறிவுதான் "குறைந்த பட்ச செயல் திட்டம்"! அதாவது நாம ஆசைப்படற அத்தனை அம்சங்களும் இருக்கற பொண்ணா வேணும்னு நினைக்காம, அவசியம்னு நினைக்கற எதிர்பார்ப்புகளின்படி பொண்ணு தேடறது! ஆசைங்க எதிர்பார்ப்புங்க ஆயிரம் இருக்கலாம்! ஆனா நம் இயல்புக்கும் நம் எதிர்காலத் திட்டத்துக்கும் நம் வீட்டாருக்கும் ஏற்றபடி வரப்போகிற பெண்ணுக்கு குறைந்தது இந்த அம்சங்கள் இருந்தா போதுங்கற முடிவு! நம்ப கலருக்கு மேட்சா மாநிறமா இருந்தா போதும், பொண்ணு வேலைக்கு போகவேண்டாம்னு நினைக்கறதால டிகிரி படிச்சிருந்தா போதும்! இப்படி நல்லா ரெண்டு நாளைக்கு யோசிச்சி ஆறேழு கண்டுபிடிச்சுட்டீங்கன்னா கொழப்பமில்லாம பொண்ணு தேடலாம்! "என்னப்பு ஓவர டகால்ட்டி காட்டற?! நான் எதிர்பார்க்கற அத்தனை அம்சங்களும் கொண்ட பொண்ணு இந்த ஒலகத்துலையே இருக்காதோ?!" அப்படின்னு கேட்டிங்கன்னா கண்டிப்பா இருப்பாங்க! ஆனா அவங்கெல்லாம் அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நம்மை விட தகுதி வாய்ந்த பயகளுக்கு அமையறதுக்குதான் வாய்ப்புகள் அதிகம்! அதனால சீக்கிரம் மேட்டரை முடிங்க!

    தம்ரூல் என்னன்னா, எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is directly propotional to பொண்ணு தேடற காலம்!

    சொந்தத்துல சொல்லி தேடறது, புரோக்கருங்க கிட்ட சொல்லறது, பேப்பருல குடுக்கறதுன்னு இதுல நாலஞ்சு வகை இருக்கு! ஒவ்வொன்னுலையும் +ம் இருக்கு -ம் இருக்கு! முதவகைல பொண்ணை செலக்ட் செய்தா போதும்! அவங்க வீட்டுவகையறா எல்லாம் விசாரிக்கவே வேணாம்! புரோக்கருன்னா வர்றப்ப எல்லாம் காசை வாங்கிகிட்டு கத்தையா ஜாதகத்தை அள்ளி வீசுவாரு! அட்டா இத்தனை பொண்ணுகளான்னு ஆச்சரியபட்டுடாதீங்க! இதெல்லாம் அவரு இதே மாதிரி இன்னும் 100 வீட்டுல குடுத்திருப்பாரு! நீங்க இதையெல்லாம் அலசி ஆராயறதுக்குள்ள இதே மாதிரி இன்னும் 10 டெலிவரி செய்வார். அதுலையும் எதையாவது ஒன்னை செலக்ட் செஞ்சு அவருக்கு சொன்னா "அடடா! அந்த பொண்ணுக்கு நேத்துதான் நிச்சமாச்சு"ம்பாரு. நெசத்துல அது கல்யாணம் கட்டி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கே வந்திருக்கும்!

    இந்த பேப்பருல குடுக்கறதை இன்னும் நம்மாளுங்க கௌரவக் குறைச்சலாத்தான் நினைக்கறாங்க! சொந்தபந்த ஆளுங்களுக்கு தெரிஞ்சா "அடடா! பையனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்கறப்பா! அதான் பேப்பருல குடுத்திருக்காக"ன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்கன்னு பயம்! ஆனா, என்னைக்கேட்டா இதுதான் இருக்கறதுலையே ஈசியான வழி. இதோட ரீச் மிக அதிகம். ஒரே ரிஸ்க் அந்த சைடு ஆளுங்களை விசாரிச்சு அறியறதுதான்! பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி வரைக்கும் இதுக்கு உபயோகப்படுதுன்னா பார்த்துக்கங்க! இந்த காலத்துல படிச்ச பசங்க படிச்ச புள்ளைங்களை பார்க்கறதால இந்த வகைல சீக்கிரம் மேட்டரு முடிஞ்சுரும்! கொடுக்கற விளம்பரத்துல என்ன எழுதறதுன்னு யோசிக்கவே வேணாம்! ஒரு ஞாயித்துக்கிழமை பேப்பரு இருந்தா போதும்! அதுல நம்ப மக்கா விதவிதமா வகைவகையா கேட்டிருக்கறதை ஒரு தடவை பார்த்தா நமக்கு என்ன வேணும்கறதை ஈசியா கண்டுக்கலாம்! "காலையில் கோபால் பல்பொடியில் பல்துலக்க விரும்பும், வீட்டாரின் லைப்பாய் சோப்பையே உபயோக்க விரும்பும் பெண் தேவை!"கற ரேஞ்சுல வந்துக்கிட்டு இருக்கு!

    ஆண்களிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்குங்க! "ஒரு பெண்ணை வீடுவரைக்கும் போய் பார்த்துவிட்டு வேண்டாம்னு சொல்லமாட்டேன்! அது பாவம்", "விதவைப் பெண்ணைத்தான் கட்டிக்குவேன்" இப்படி. தப்பில்லைங்க. முதலாவது சரிதான்! போட்டோ ஜாதகம் பார்த்து பிடிச்சுப்போய், வீட்டுல இல்லாம வெளில கோவில்லையோ இல்லை பொண்ணுபய மட்டும் 'காபிடே'லையோ பார்த்து ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கறது நல்லது. இதில்லாம சொந்தபந்தம் அத்தனைபேரையும் அனுசரிச்சு போறேன்னு 15 பேரோட வாரம் இருமுறை வீடுவீடா போய் இறங்கி செலக்ட் செய்யறது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது! இதையும் மீறி சில பல காரணங்களால் அமையலைன்னா இதுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை! இந்த அரேஞ்ச்டு மேரேஜ்ல இதெல்லாம் தவிர்க்க முடியாது. இரண்டாவது, ஒரு பெண்ணை பிடித்துப்போய் "இவள் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் மகிழ்வேன்! விதவை என்பது பிரச்சனையில்லை! மனதார ஏற்றுக்கொள்வேன்" என்று ஒரு திருமணம் செய்வது வேறு! "ஒரு விதவைக்கு வாழ்க்கை தருவதே என் லட்சியம்! அதனால் கட்டினால் கைம்பெண்தான்" என சொல்லிக்கொண்டு 10 விதவைகளை பார்த்து அதில் நல்ல விதவையாய் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது வேறு! தேர்ந்தெடுக்கும்போதே அந்த நோக்கம் அடிபட்டுப் போகிறது. திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!

    ஜாதகம் என்பதையும் உங்கள் வீட்டு பெருசுகளின் மனத்திருப்திக்காகவும் உங்களின் திருப்திக்காகவும் என்ற அளவில் மட்டுமே பாருங்கள்! பொண்ணு போட்டோ பிடிச்சிருக்கு, 10க்கு 7 பொருத்தம் இருக்கு! செய்யலாமா? சந்தோசம்! வீட்டு ஆளுங்களை பிடிச்சிருக்கா சந்தோசம்! பேசிப்பார்த்ததுல விசாரிச்சுப்பார்த்ததுல ஒத்து வரும்னு தோணுதா! சந்தோசம்! நிச்சயத்தை வைச்சுக்க வேண்டியது! நாள் குறிச்சு முகூர்த்தத்தை வைச்சுக்க வேண்டியது! அவ்வளவுதான்! இதில்லாம பொண்ணு பார்க்க போறது, தாலி வாங்கறது, புடவை என்ன கலர் ராசி, நிச்சியத்துக்கு அப்பறம் பொண்ணு வீட்டை விட்டு வெளில போலாமான்னு தொட்டது தொன்னூருக்கும் ஜோசியரை கேட்டுக்கிட்டு இருந்தம்னா நம்ப விருப்பத்துக்கு இல்லாம கல்யாணம் ஜோசியரு விருப்பத்துக்குதான் நடக்கும்!

    போன பதிவுல நம்பகமா நெளிவுசுழிவோட பேசறதுக்கு ஒருத்தரு வேணும்னு சொன்னேன்ல! அது பொண்ணு இதுதான்னு கண்ணுபிடிச்சப்பறம் ரெண்டு சைடுலையும் நல்ல விதத்துல பேசி முடிக்கறதுக்கு! சிலதெல்லாம் நேருக்குநேரா கட்ரைட்டா பேசமுடியாது! அதுக்கெல்லாம் இவுகதான் கரெக்ட்டு! "கல்யாணத்தை கோவில்லதான் வைக்கனும்.இது எங்க பரம்பரை வழக்கம்"னு நாம சொல்ல, "முடியாது! எங்களுக்கு ஒரே பொண்ணு! சிறப்பா மண்டபத்துல தான் செய்யனும்"னு அவங்க சொல்ல, இந்த மாதிரி ஆளுக "சரிங்க! முகூர்த்தத்தை மட்டும் காலைல கோவில்ல வைச்சுக்கலாம், தாலி கட்டுன உடனே நேரா மண்டபம்தான்! மத்தியான விருந்துல இருந்து சாயந்தர ரிசப்சன் வரை கிராண்டா கொண்டாடிலாம்"னு ரெண்டு பக்கமும் காயப்படாம பேசி முடிக்கறதுக்கு இவங்க உதவி கட்டாயம் தேவை!

    நானெல்லாம் வரதட்சணை வாங்க கூடாதுங்கற கட்சி! அதுக்காக உங்களையும் அப்படி செய்யறதுதான் கரெக்டுன்னு இங்கு வாதாட விரும்பலை! குடும்ப கவுரவம், எங்க பொண்ணுக்கு செய்யறோம்னு இதுல ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கு! அதனால எதிர்பார்ப்புகளை தெளிவா இதது இப்படித்தான்னு கேக்கறது எவ்வளவோ நல்லது! அவங்களும் முடிஞ்சா செய்யறோம், இல்லைன்னா வேற இடம்னு போயிருவாங்க! இதெல்லாம் இல்லாம "எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை! உங்க சக்திக்கு முடிஞ்சதை செய்யுங்க" அப்படிங்கறது நமக்கு வேணா நாகரீகமா சொல்லறதா இருக்கலாம்! ஆனா அந்த சைடு கொழ்ம்பிருவாங்க! எது செஞ்சாலும் குத்தமா போயிருமேன்னு படபடப்பாவே இருக்கும்! செஞ்சதுக்கப்பறம் "இது நொள்ளை! அது கம்மி"ன்னு சொல்லறதுக்கே நம்மாளுக நாலுபேரு கூட இருப்பாங்க! ஞாபகம் வைச்சுக்கங்க "சொம்பு சைசு சின்னது"ன்னு வீம்பு புடிச்ச ஆளுங்க எல்லாம் செயிலுக்கு போறவரைக்கும் எல்லாம் மேட்டரு போயிருக்கு!

    போன பதிவுலையே கடைசியா சொல்லாம விட்ட மேட்டரு ஒன்னு! ஏதோ இப்போத்தான் மழைக்கு போதிமரத்துக்கு கீழ தெரியாம ஒதுங்கிட்ட மாதிரி ஒரு நல்லெண்ணம் மனசுல வந்து கல்யாணத்துக்கு முன்னாடி ஓடம்பைத் தேத்தனும், வெயிட்டை குறைக்கனும், தேகத்துல 'தெம்பு' கூட்டனும்னு ஒரு துடிப்பா இருக்கும்! அப்படின்னா இந்த ஜிம்முக்கு போறது, காலைல பால்காரனுக்கு இணையா ஓடறதுன்னு எதையாவது இப்போவே ஆரம்பிச்சுடுங்க! இதெல்லாம் இல்லாம கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் இந்த ஐடியா வந்ததுன்னா ஒன்னுத்துக்கும் வேலைக்காவாது! இவ்வளவு நாள் ஊத்தி ஊத்தி ஊறப்போட்ட கல்லீரலையும், ஊதி ஊதி கறையாக்குன நுரையீரலையும் ஒரே மாசத்துல மீட்டு கொண்டுவந்துடலாம்னு கடைசி கட்டத்துல ஜிம்முக்கோ, ஏரோபிக்ஸ்சுக்கோ போய் அங்க இங்க புடிச்சிக்கிட்டு முகூர்த்தத்துல தாலியை தூக்கமுடியாம போனாக்கூட பரவாயில்லை... பின்னாடி நின்னு யாராவது சித்தி, அக்கான்னு உதவுவாங்க! ஆனா அதுக்கப்பறம்... ஆமா... சொல்லிட்டேன்!

    உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!

    இன்னைக்கு அவ்வளவுதாங்க மேட்டரு!

  • free birds

    Copy of shutterstock_654479shutterstock_654479

Footer:

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.